அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் இனங்காணப்பட்டுள்ளது – சாரதிகளுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாரளர் எச்சரிக்கை!
Thursday, April 1st, 2021
இலங்கையில் அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் கருதப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஏப்ரல் 10 ஆம் திகதிமுதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகளவான விபத்துக்கள் சம்பவிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் வீதி போக்குவரத்து விதிகளை சாரதிகள் உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை நேற்று பதிவான விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
5 நாள் அரச விடுமுறையில் ஜனாதிபதி!
நுண்கடன் பெற்றவர்களுக்கு சமுர்த்தியை நிறுத்தத் திட்டம் - துணுக்காய் பிரதேச செயலாளர் தெரிவிப்பு!
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
|
|
|


