அதானியின் காற்றாலை மின்சாரத்திட்டம் – 20 வருடங்களுக்கும் நிலையான கட்டண அறவீடு – அனில் சர்தானா தெரிவிப்பு!

Friday, July 5th, 2024

இலங்கையில் அதானி கிரீன் எனர்ஜியின் காற்றாலை திட்டத்தின் ஊடாக, வழங்கிய கட்டணங்கள் 20 வருட ஒப்பந்தத்தின் முழு காலத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அதானி பவர் லிமிடெட் மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் முகாமைத்துவப் பணிப்பாளரும், தலைவருமான அனில் சர்தானா இதனை தெரிவித்துள்ளார்

அதானி குழுமத்தின் உலகளாவிய நிறுவன தலைமையகத்தில் அண்மையில்  இலங்கை ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

”கட்டணங்களில் வெளிப்படைத் தன்மையின் அவசியத்தை சர்தானா இதன்போது வலியுறுத்தியுள்ளார்

முன்னதாக மற்ற மின் நிறுவனங்கள் ஆரம்பத்தில் குறைந்த விலையை கூறின. ஆனால் பின்னர் கட்டணங்களை அதிகரித்தன, இதனால் நுகர்வோர் மீது சுமை ஏற்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் மற்றும் பூநகரியில் இரண்டு காற்றாலை மினசார் நிலையங்களை அமைக்க அதானி நிறுவனம் முன்வந்துள்ளது.

484 மெகாவோட் ஒட்டுமொத்த நிறுவப்பட்ட திறனை  நோக்காக கொண்டு,  ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேலான ஒட்டுமொத்த முதலீட்டுடன் இந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன” என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts:

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் அடையாள அட்டை இலக்க நடைமுறை அமுலில் இருக்கும் - பொலிஸ்மா அதிபர் அஜித...
இரணைமடு பகுதி நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கட்டியெழுப்பப்படும் – ஈ.பி.டி.பி...
13 ஆவது திருத்தத்தை உரியமுறையில் அமுல்ப்படுத்த வேண்டும் - மார்ச் 12 இயக்கம் வலியுறுத்த முனைந்தது ஒரு...