அண்ணா என் உயிரை காப்பாற்றுங்கள்: கதறி அழும் யுவதி!

Saturday, October 7th, 2017

சிறுநீரகங்கள் இரண்டும் முழுமையாக பாதிப்படைந்த யுவதி ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் மனிதநேயம் கொண்ட இளைஞன் ஒருவர் முன்வந்துள்ளார்.

பின்தங்கிய கிராமம் ஒன்றில் வாழும் யுவதி ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் 96 வீதம் சேதம் அடைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றார்.

அவருக்கு விரைவில் சிறுநீரகம் பொருத்த வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். யுவதியின் சிகிச்சைக்காக மாதமொன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் செலவிட வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் அவ்வளவு பணம் செலவிடும் அளவு அந்த யுவதியின் குடும்பத்தினருக்கு வசதியில்லை. இது தொடர்பான தகவலை அறிந்து கொண்ட புஷ்பகுமார என்ற இளைஞன், வைத்தியத்திற்கான முழுமையான செலவையும் ஏற்பதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பில், புஷ்பகுமார தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில், புகைப்படத்தில் இருப்பவர் 22 வயதுடைய தங்கை. அவரது இரண்டு சிறுநீரகங்களும் 96 வீதம் சேதமடைந்துள்ளது. முடிந்தளவு விரைவில் சிறுநீரகம் ஒன்றை பொருத்துமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த தங்கை எனக்கு அழைப்பேற்படுத்தி அண்ணா எனக்கு வாழ விருப்பமாக உள்ளது. என்னை காப்பாற்றுவதற்கு தாய் தந்தையிடம் பணம் இல்லை.

மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக பணம் தேவைப்படுகின்றது. முடியும் என்றால் எனக்கு வாழ்க்கை கொடுக்குமாறு அவர் கேட்டுள்ளார்.அதற்கமைய உடனடியாக அந்த குடும்பத்தினரை தனது அலுவலகத்திற்கு அழைத்த புஷ்பகுமார முதல் மாத செலவிற்கான பணத்தை வழங்கியுள்ளதுடன், அவருக்கான அனைத்து செலவையும் ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.வறுமை கோட்டில் வாழும் யுவதியின் கோரிகையை ஏற்று உடனடியாக உதவ முன்வந்த புஷ்பகுமாரவுக்கு பல்வேறு மட்டத்திலிருந்தும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Related posts: