அடுத்த வருடம் நிச்சயம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர அறிவிப்பு!

Friday, July 28th, 2023

அடுத்த வருடம் கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்..

ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

இதன்போது மேலும் தெரிவித்த அவர், எல்லை நிர்ணய குழு அறிக்கை தொடர்பான பரிந்துரைகளை அமுல்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள முறையினால் சன்ஹிதிய செயற்பாடுகள் பாரியளவில் பாதிக்கப்படுவதுடன் உள்ளுராட்சி அதிகாரிகள் மேலும் சிக்கல் நிலைமைக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: