அடுத்த வருடம் உணவுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் ? – அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க!

Tuesday, December 27th, 2016

அடுத்த வருடம் உணவு பற்றாக்குறை ஏற்படக் கூடும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வலப்பனை லியன்வல பிரதேசத்தில் 200 ஏக்கரில் குரக்கன் பயிர் செய்கையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் மழை வீழ்ச்சியில்லாத காலநிலை காரணமாக பயிர் செய்கைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக அரிசியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

s.b.dissanayake

Related posts: