அடுத்த மாதம் ஒரு மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!
Monday, June 28th, 2021உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவக்ஸ் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு அடுத்த மாதம் ஒரு மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் கிடைக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த உறுதிப்படுத்தல் கிடைத்ததாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அவசரகால பயன்பாட்டிற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட மொடர்னா தடுப்பூசியை, இலங்கை 4 ஆவது தடுப்பூசியாக பயன்படுத்தவுள்ளது.
குறித்த தடுப்பூசியை தவிர இலங்கைக்கு நேரடி நன்கொடையாக அமெரிக்காவிலிருந்து மற்றொரு தொகுதி தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது -கெஹெலிய.!
விமானங்களை குத்தகைக்கு எடுப்பதில் பாகிஸ்தான் முனைப்பு!
அதிகரிக்கும் கொரோனா வைரஸ் : சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அச்சம்!
|
|
வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நிதி நிறுவனங்களிடமிருந்து மக்கள் பெற்றுக்கொண்ட கடன்களை இர...
நாட்டில் வீதி விபத்துகளைக் குறைக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோ...
நாடகங்கள் வெறும் கூத்து அல்ல - நாட்டை ஆளும் தலைவர்களையும் உருவாக்கவல்லது – ஈ.பி.டி.பியின் தவிசாளர் ம...