அடுத்த பதினைந்து நாள்களுக்கு வகுப்பறை கற்பித்தல் நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும் – இலங்கை தேசிய அதிபர்கள் சங்கம் அறிவிப்பு!

Monday, July 22nd, 2024

எதிர்வரும் பதினைந்து நாட்களுக்கு வகுப்பறைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவுள்ளதாக இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பராக்கிரம விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னிட்டு சகல வெளி நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றுமுதல் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, இன்றுமுதல் மாகாண கல்வி மற்றும் பிராந்திய கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள், பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரசியல் இயக்கங்களை வலுப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு தாம் ஆதரவளிக்கவில்லை என ஆசிரியர் – அதிபர் ஒன்றியத்தின் அழைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts:

2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் 150 நாட்களாக குறைப்பு - - கல்வி அமைச்சர் பேராசிரியர...
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை திங்களன்று விடுவிக்க நடவடிக்கை - அத்தியாவசிய பொருட்கள்...
பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு விசேட வேலைத்திட்டம் விரைவில் - நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமென பிர...