அடுத்த இரு வாரத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, April 13th, 2021

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் 2020 ஒக்டோபரில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முன்பதாக 2020 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய உயர்தர பரீட்சைகள் 2020 ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 6 ஆம் திகதி நிறைவடைந்தது. இதில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் கடந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இதேவேளை இவ்வாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய பின்னர் குறித்த மாணவர்களை பல்கலைக் கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும் அதேவேளை ஜூன் மாதம் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் அம்மாணவர்கள் ஜூலை மாதம்முதல் உயர்தர கல்வியை ஆரம்பிக்க முடியும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சை , புலமைப்பரிசில் பரீட்சை என்பன ஒக்டோபர் மாதம் வரையும் , சாதாரண தர பரீட்சைகள் 2020 ஜனவரி வரையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உடுவில் கல்விக் கோட்டத்துக்குட்பட்ட 120 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிப்ப...
விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை - சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!
நிதி நெருக்கடி காரணமாக வளங்களை அணுகுவது தடைப்பட்டுள்ளது - 4 ஆவது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் ...