அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசி – சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் தகவல்!

Tuesday, December 8th, 2020

அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேவையான குளிர்ந்த வெப்பநிலையின் கீழ் தடுப்பூசிகளை சேமிப்பதில் இலங்கை நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துதள்ளார்.

“இங்கிலாந்தில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி தற்போது கணிசமாக குளிர்ந்த வெப்பநிலையில் வைக்கப்படுவதன் மூலம் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது இலங்கைக்கு அந்த வசதி இல்லை. வைரஸ் தொடர்பாக இதுவரை எந்தவொரு தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை, ”என்று வைத்தியர் சமரவீர தெரிவித்துள்ளார்.

ஆகவே, உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்படும் வரை இலங்கை எந்த கொரோனா தடுப்பூசியையும் பெறாது என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சில பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் இதுபோன்ற பகுதிகளில் கொரோனா வைரஸ் நோயாளிகள் தொடர்ந்து கண்டறியப்படுவதால் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: