அடுத்தவாரம் பாடசாலை சீருடைக்கான வவுச்சர்!
Saturday, December 2nd, 2017
பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் அடுத்த வாரம் வழங்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மூன்றாம் தவணைக்கான பரீட்சைகள் எதிர்வரும் வாரத்துடன் முடிவடையவுள்ளது. இதையடுத்து டிசெம்பர் எட்டாம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படும் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில் பாடசாலை மாணவ, மாணவியருக்கான இலவச சீருடைகளுக்கான வவுச்சர்கள் எதிர்வரும் வாரம் வழங்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான வவுச்சர்கள் ஏற்கனவே மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
நாடு முழுவதும் இயங்கும் அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் சுமார் நாற்பது இலட்சம் மாணவ, மாணவியரின் சீருடைகளுக்காக அரசு 2,370 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
அதேவேளை தனியார் பாடசாலை மாணவ, மாணவியரின் சீருடை தேவைக்காக 75 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை!
தற்போதைய நெருக்கடி திடீரென உருவாகவில்லை - இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக பிரித்தானியா அ...
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்த அதிகார சபை - ஒழுங்குமுறை ஆணைக்குழுவுக்கு முந்நூற்று தொண்ணூற்று இரண்...
|
|