அஞ்சல் பணியாளர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து – அஞ்சல் திணைக்களம் அறிவிப்பு!

Monday, December 12th, 2022

சேவையை தடையின்றி பேணுவதற்காக அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவையாளர்கள் நேற்று பிற்பகல் 4 மணிமுதல் முதல் அடையாள பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த பணிப்புறக்கணிப்பானது இன்று நள்ளிரவு 12 மணி வரையில் முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

அஞ்சல் சேவையினை தனியார் மயப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றமை, தனியார் ஊடாக அஞ்சல் விநியோக சேவையினை முன்னெடுப்பதற்கு எடுத்துள்ள தீர்மானம் மற்றும் சேவையாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது

நாடளாவிய ரீதியில் உள்ள 27 ஆயிரத்திற்க்கும் அதிகமான அஞ்சல் சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை இணைப்பாளர் சிந்தக்க பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையிலேயே பணியாளர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளமை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: