அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் தற்போது ஐந்து நிறுவனங்களே இயங்குகின்றன!

Thursday, July 26th, 2018

அச்சுவேலி தொழில் பேட்டையை மீளவும் கட்டியெழுப்ப 100 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது. இங்கே தற்போது 39 காணித் துண்டங்களில் 13 நிறுவனங்கள் நிலத்தைப் பெற்றபோதும் 5 நிறுவனங்களே இயங்குகின்றன என்று தொழில்த் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

அச்சுவேலித் தொழில்பேட்டையானது 1972 இல் ஆரம்பித்து பின்னர் 2 ஆயிரம் பணியாளர்களுடன் இயங்கியது. ஆனால் தற்போது 5 நிறுவனங்கள் மட்டுமே இயங்குகின்றன. 2012 இல் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்பு தற்போது மின்சாரச் சலுகை வழங்கப்படுகின்றது. அதில் ஒரு நிறுவனத்துக்கு மட்டும் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மின்சாரப் பட்டியல் வரும் நிலையில் அதில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படுகின்றது. அவ்வாறே அனைவருக்கும் வழங்கப்படும். அதனால் ஏனையோரும் முன்வர வேண்டும்.

அச்சுவேலித் தொழில்பேட்டைக்கு மொத்தம் 65 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 25 ஏக்கரே தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதனால் மேலும் 22 ஏக்கர் நிலம் துப்புரவு செய்ய நடவடிக்கை இடம்பெறுகின்றது.

Related posts:


சுற்றாடல் பாதுகாப்பிற்கான புதிய கொள்கைத்திட்டங்களை வகுக்க நடவடிக்கை - சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அ...
ஆசிய அபிவிருத்தி வங்கி தொழில்நுட்ப உதவி - நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கை திறம்பட முன்னெடுக...
யாழ் மாவட்டத்தில் காணப்படும் அனுமதியற்ற நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துங்கள் - வ...