4129 அந்தர் உருளைக்கிழங்கு விநியோகம்!

Wednesday, December 20th, 2017

யாழ். மாவட்டத்தில் உருளைக்கிழங்கு செய்கைக்கென 4129 அந்தர் வரையிலான விதை கிழங்குகள் எடுத்து வரப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இம் முறை உருளைக்கிழங்கு செய்கைக்கு கூடுதலான விவசாயிகள் ஆர்வம் காட்டியிருந்தனர். என்றாலும் போதியளவு கிழங்குகள் எடுத்துவரப்படாததால் செய்கையை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. இந்த விதைக்கிழங்குகள் யாவும் செய்கையாளருக்கு ஐம்பது வீத மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.

தற்போதைய கால நிலையை பயன்படுத்தி செய்கையாளர்கள்  அவசர அவசரமாக விதை கிழங்குகளை நடுகை செய்தும் வருகின்றனர்.

நீர்வேலி கோப்பாய் உரும்பிராய் ஊரெழு புன்னாiலைக்கட்டுவான் போன்ற இடங்களில் அதிகமாக விவசாயிகள் இந்த செய்கையை ஆரம்பித்துள்ளனர்.

Related posts: