27 ஆம் திகதிவரை நாளாந்தம் 200 நிமிட மின்வெட்டு – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Monday, April 25th, 2022

இந்த வாரமும் நாளாந்த மின்வெட்டு தொடரவுள்ளது. இதற்கமைய  இன்று (25) முதல் ஏப்ரல் 27 ஆம் திகதிவரை நாளாந்தம் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

முன்மொழியப்பட்ட அட்டவணையின்படி, ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ பகுதிகளுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டு மணி நேர மின்வெட்டு விதிக்கப்படும்.

இதற்கிடையில், A முதல் L மற்றும் P முதல் W வரையிலான பகுதிகளுக்கு நாளாந்தம் மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒரு மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டும் அமுல்படுத்தப்படும்.

மேலும், எரிபொருள் தட்டுப்பாடு, நீர் சேமிப்பு மற்றும் மின்பிறப்பாக்கிகள் கிடைக்காமை போன்ற காரணங்களால் தேவை முகாமைத்துவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாளாந்தம் காலை 6 மணி முதல் 9.20 மணி வரை CC பகுதியில் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப் படும் என CEB தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: