21 வயதுக்குட்பட்டவர்களுக்கு யாழ்.நகரில் சிகரெட் விற்பனை!

Friday, October 14th, 2016

யாழ் நகர் பகுதியில் பிரபல தனியார் கல்வி நிறுவனத்திற்கு அண்மையில் உள்ள கடை ஒன்றில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக யாழ்ப்பாண மதுவரி திணைக்களத்தினர் நேற்றையதினம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

யாழ் நாவலர் வீதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு அண்மையில் உள்ள கடை ஒன்றில் 21 வயதுக்குட்பட்டோருக்கு புகைப்பொருட்கள் விறிபனை செய்யப்பட்டு வருவதாக மதுவரி திணைக்களத்தினருக்கு அப்பகுதி மக்களால் முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த பகுதிக்கு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட மதுவரி திணைக்களத்தினர் குறித்த கடையில் சந்தேகத்துக்கிடமானமுறையில் புகைத்துக் கொண்டிருந்ததனை அவதானித்ததுடன் 21 வயதுக்கு குறைந்த மாணவருக்கும் சிகரெட் விற்பனை செய்யப்படுவதை அவதானித்துள்ளனர். உடனடியாக மதுவரி திணைக்களத்தினர் குறித்த கடை உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ததுடன் இன்றைய தினம் அவரை யாழ்.நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்துள்ளனர்.

1029638173Untitled-1

 

Related posts: