17 மாணவர்களுக்கு வகுப்புத் தடை!

Saturday, July 23rd, 2016

இரண்டு வாரங்களுக்கு முதல் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 17 மாணவர்களுக்கும் 5 வார கால வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணிகளின் போதே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றதுடன்,

இதனுடன் தொடர்புடைய விஞ்ஞானம், பொறியியல், முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: