யாழ்.இந்து கல்லூரி அதிபர் பொறுப்பேற்பு!

Wednesday, October 16th, 2019


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பதில் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன் இன்று முற்பகல் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் அலுவலகத்தில் பாடசாலை சமூகத்தின் வரவேற்பையடுத்து அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுகொண்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இதுவரை காலமும் பதில் கடமையாற்றி வந்த சதாசிவம் நிமலன், மாணவர் அனுமதிக்காக கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, கல்வி அமைச்சில் உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஆர். செந்தில்மாறன் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான ஆர். செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணி பட்டத்தைப் பெற்றிருப்பதுடன், பட்டப் பின் தகைமையையும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: