வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் தமிழ்க் கட்சிகள் இணைய வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!

தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக்கூடாது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதோடு, வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் உரையாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அன்றும் சரி, இன்றும் சரி தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தாம் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கும் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பெண்கள் மத்தியில் புற்று நோய் பற்றிய - விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணி !
சட்ட அமைப்பில் 100 பகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்த தயார் - நீதி அமைச்சர் அறிவிப்பு!
க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பிக்கும் முடிவு திகதி 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் - கல்வி அமைச்சு அ...
|
|