வெளிநாடுகளிலிருந்து மேலும் சிலர் நாட்டை வந்தடைந்தனர்!

Sunday, October 25th, 2020

கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டாரில் இருந்த 26 பேரே இவ்வாறு இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக இலங்கையர்களை திருப்பி அனுப்புவதை தற்காலிகமாக தாமதப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: