வெளவால் கடிக்கு இலக்கான இருவர் வைத்தியசாலையில்!

Tuesday, June 12th, 2018

சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இருவர் வெளவால் கடிக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த மு.ஜெயசிங்கம் (வயது 69), பொ.கந்தசாமி (வயது 66) ஆகிய இருவருமே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் நின்ற ஜம்பு மரத்தினை மூடி வலைபோடும்போது அதனுள் அகப்பட்ட வெளவாலை காப்பாற்ற முற்பட்டபோதே இருவரும் வெளவால் கடிக்கு இலக்காகியுள்ளனர்.

Related posts: