வெதுப்பக கிணற்றுக்குள் இறந்த  நிலையில் நாய்: வெதுப்பகம்  மூடப்பட்டது – நெல்லியடியில் சம்பவம்!

Wednesday, December 14th, 2016

நெல்லியடி நகரில் உள்ள வெதுப்பகம் ஒன்றின் கிணற்றுக்குள் நாயொன்று இறந்த நிலையில் காணப்பட்டதால் அந்த வெதுப்பக உற்பத்திகள் அனைத்தையும் அழித்த சுகாதாரப் பகுதியினர் வெதுப்பகத்தையும் மூடுமாறு பணித்துள்ளனர்.

கிணற்றுக்குள் நாய் காணப்பட்ட விடயம் தொடர்பாக கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி சுரேஸ்குமார் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற அவரும் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரும் வெதுப்பகத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருந்த அனைத்து உணவுப் பொருட்களையும் அழித்தனர். வெதுப்பகத்தை மூடுமாறு கூறிய அவர்கள் மறு அறிவித்தல் வரை அங்கு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்தனர் இதேவேளை, தங்களுடன் தனிப்பட்ட விரோதமுடைய சிலர் அந்த நாயைக் கொன்று விட்டு கிணற்றில் கொண்டு வந்து வீசியிருக்கலாம் என்று வெதுப்பக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Bakare-09

Related posts: