வீட்டில் மேலதிகமாகக் மது வைத்த்திருந்த எண்மருக்கு அபராதம்!

Friday, July 29th, 2016

வீட்டில் மேலதிகமாகக் கள் வைத்திருந்த எண்மருக்குத் தலா-ஆயிரம் ரூபா மல்லாகம் நீதிமன்றத்தால் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் மதுவரி நிலைய அதிகாரிகளினால் கடந்த வாரம் அளவெட்டி, மல்லாகம், தெல்லிப்பழை, புத்தூர் ஆகிய பகுதிகளிலுள்ள சீவல் தொழிலாளர்களின் வீடுகளில் தீடீர்ப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது வீட்டில் மேலதிகமாகக் கள் வைத்து விற்பனை செய்த எட்டுப் பேருக்கு எத்திராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் புதன்கிழமை(27) குறித்த வழக்கு மல்லாகம் நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கண்டவாறு உத்தராகிவிட்டார்

Related posts: