விமானி பணி இடைநீக்கம்!

Sunday, August 21st, 2016

ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL554 என்ற விமானத்தினுடைய விமானி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 19ம் திகதி ஜேர்மனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்தது. எனினும், அந்த விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதமடைந்ததோடு, நேற்று இரவு 07.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதனையடுத்து ஏற்பட்ட தாமதம் காரணமாகவே சம்பந்தப்பட்ட விமானத்தின் விமானி ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  சம்பவம் இடம்பெற்ற போது அவர் மது போதையில் இருந்தாரா என மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர் தோல்வியடைந்துள்ளமையை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts: