விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்!
Tuesday, August 23rd, 2016
விமானம் கால தாமதமடையக் காரணமான விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிராங்போட்டில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த விமானம் கால தாமதமடைவதற்கு காரணமாகவிருந்த விமானியின் அனுமதிப்பத்திரம் இவ்வாறு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம் செய்யப்பட்டமை குறித்தும், விமானியின் நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரியும் கடிதமொன்று விமானிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விமானி மது போதையில் இருந்த காரணத்தினால் உரிய நேரத்தில் விமானத்தை செலுத்த முடியாத போனதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே விமானியின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது விமானியின் விமானப் பயண அனுமதிப்பத்திரமும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|