வித்தியா கொலை வழக்கின் இரகசிய வாக்குமூலங்களை தர நீதிமன்று மறுப்பு!

Wednesday, July 13th, 2016

மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், நீதிமன்றத்தில் தனியாக வழங்கிய வாக்குமூலங்களை குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு வழங்க முடியாது என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் தெரிவித்துள்ளார்.

வன்புணர்வுக்குட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட, புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் இடம்பெற்ற வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் பாரப்படுத்தியுள்ளதாகவும், நீதிமன்றத்தில் இரகசியமான முறையில் சந்தேகநபர்கள் அளித்த வாக்குமூலங்களின் பிரதிகளைத் தந்துதவினால், விசாரணைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் எனவும் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நீதவானிடம் கோரிக்கை விடத்திருந்தனர்.

எனினும், அந்தக் கோரிக்கையை மறுத்த நீதவான், ‘அது சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தரமுடியாது. இந்த வழக்கு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் போது, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அவை பாரப்படுத்தப்படும். அதன்போது, நீங்கள் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்’ என்றார்.

Related posts: