உதவித்தொகை பெறுபவர்கள் மீளாய்வுக்கான பதிவை மேற்கொள்ளவும்!

Monday, February 19th, 2018

தென்மராட்சிப் பிரதேச செயலக சமூகசேவைப் பிரிவால் பொதுசன மாதாந்த உதவித்தொகை மற்றும் முதியோர்களுக்கான உதவிக் கொடுப்பனவு (2000 ரூபா) பெறுபவர்களுக்கான மீளாய்வு கிராம அலுவலர் பிரிவு ரீதியாக கிராம அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்றுவருகின்றன.

இந்த உதவித்தொகையைப் பெறுவோர் பணம் பெறும் அத்தாட்சிப் பத்திரம், குடும்ப அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தருமாறு பிரதேச செயலர் தே.பாபு அறிவித்துள்ளார்.

மீளாய்வு தொடர்பான விவரங்களை தத்தமது கிராம அலுவலருடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

Related posts:

நல்லூரில் வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலும் அதிக தொகை நிதி வசூலிப்பு: கண...
யாழ். பல்கலைக்கழகத்தின்  முகாமைத்துவக் கற்கைகள்  பீடத்தின் பீடாதிபதியாக  மூன்றாவது தடவையாக வேல்நம்பி...
ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இலங்கையுடன் இணைந்து தயாரிக்கும் முயற்சியில் ரஷ்யா - அமைச்சர் தினேஷ் குணவர்...