விசேட வைத்தியர்களுக்கு 60 வயதில் கட்டாய ஓய்வு – அரசாங்கத்தின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரிய மனு மீதான தீர்ப்புக்க திகதியிட்டது மேன்முறையீட்டு நீதிமன்றம்!
Saturday, October 21st, 2023விசேட வைத்தியர்களுக்கு 60 வயதில் கட்டாய ஓய்வளிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை அறிவிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
குறித்த மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயஷ் ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் உள்ள 176 விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்தியர்கள் குழுவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சட்டவிரோத மின்சாரம் பெற்ற 7 பேர் கைது
அருட்கலாநிதி ஜோசப் குணாளன் தியாகராஜாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாத...
அரச வெசாக் விழா இம்முறை நயினாதீவில் - பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை கொண்டாட ஏற்பாடு செய...
|
|