வற் வரியில் மேலும் பல திருத்தங்கள் – நிதியமைச்சர்!

Monday, August 8th, 2016

வற் வரி சீர்த்திருத்தில் மேலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சீர்திருத்த சட்ட மூலம் நாளையதினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்ட அவர் வற் வரி சீர்த்திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு, நாளையதினம் சபாநாயகரினால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மோதரை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 10ஆம் 11ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள வற்வரி சீர்திருத்த சட்ட மூலத்திற்கு தாம் ஆதரவு அளிக்க உள்ளதாக, அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். எனினும் குறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு, தாங்கள் தயாராக இல்லை என்று ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாடாளுமன்றத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 % சதவீத பலத்தை பெற முடியாது - ஜனாதிபத...
ஜூன் மாதத்தில் 16,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலா அபிவிருத்தி அதிகார ச...
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு க...