வறட்சியினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா உதவி!

Tuesday, April 11th, 2017

இலங்கையில் நிலவும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கம்  உதவ முன்வந்துள்ளது. இதன்கீழ் எட்டு நீர் பவுசர்களும் 100 மெற்றிக் தொன் அரிசியும் இலங்கைக்கு கிடைக்கிறது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ்.ஜெயசங்கரிடம் முன்வைத்த கோரிக்கையை அடுத்து இந்த உதவித் தொகை இலங்கைக்கு கிடைத்துள்ளது. நீர் பவுசர்கள் இலங்கைக்கு ஏற்கனவே  வழங்கப்பட்டுள்ளதோடு அரிசி தொகை விரைவில் வந்தடையவுள்ளது.

Related posts: