தராசுக்கு முத்திரையிடும் பணி யாழ். செயலகத்தில் அடுத்த வாரம் ஆரம்பம்!

Monday, January 9th, 2017

யாழ்.ப்பாணம் வர்த்தக நிலையங்களில் உள்ள நிறுவன அளவை உபகரணங்களுக்கான முத்திரையிடும் பணிகள் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என யாழ். வணிகர் கழகம் அறிவித்துள்ளது.

அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகளுக்கான திணைக்களத்தினர் யாழ்.மாவட்டச் செயலக்தில் ஜனவரி 16,17,18 மற்றும் 23,24,25 ஆகிய திகதிகளில் வர்த்தக நோக்கிலான அனைத்து அளவை உப காரணங்களுக்கும் 2017ஆம் வருடத்துக்கான முத்திரையிடல் பணியை மேற்கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணம் வர்த்தகத்கள் அனைவரும் தமது நிறுவை அளவை உபகரணங்களுக்கான முத்திரையிடல் பணிகளை குறிப்பிட்ட திகதிகளில் மேற்கொள்ளுமாறு யாழ்.வணிகர் கழகம் கேட்டுக்கொள்கின்றது என்று கழகத்தில் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IV-b3393

Related posts: