வட்டுக் கோட்டையில் ஆயிரம் கிலோக் கிராம் கஞ்சாவுடன் கைதானவருக்கு விளக்கமறியல்!
Friday, October 14th, 2016
யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டையில் ஆயிரம் மில்லிக் கிராம் கஞ்சாவுடன் கைதான சந்தேகநபரை எதிர்வரும்-25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் கடந்த செவ்வாய்க்கிழமை(11) உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த திங்கட்கிழமை இரவு யாழ். வட்டுக் கோட்டைப் பகுதியில் வீதி ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பிரதேசப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நபரொருவரைச் சோதனையிட்டனர். அப்போது குறித்த சந்தேகநபரிடமிருந்து ஆயிரம் மில்லிக் கிராம் கஞ்சாவினை வட்டுக் கோட்டைப் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இவ்வாறான நிலையில் சந்தேகநபரை நேற்று முன்தினம் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்திய போது நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.

Related posts:
மத்திய வங்கி ஆளுநரின் உடனடி தீர்வை எதிர்ப்பார்கும் இறக்குமதியாளர்கள்!
வாரத்தில் மூன்று தடவை யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை - வர்த்தக...
வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் காலையில் அலுவலகத்திற்கு சமுகமளிப்பது கட்டாயம் - அரச உத்தியோகத்தர்...
|
|
|
இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பிலான ஒப்பந்தங்களை நிறைவுசெய்வதற்கு நிதியமைச்சர் பஷில் மீண...
பலம் வாய்ந்த ராஜ்ஜியங்களுக்கு இடையேயான முரண்பாடுகளில் தலையிடும் வாய்ப்பு எமக்கில்லை – ஜனாதிபதி ரணில்...
இலங்கையின் திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு - கொரிய குடியரசின் தொழிலாளர் மற்ற...


