வடமாகாணத்திலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் துறை மாவட்ட அலுவலகங்களுக்குப் புதிய உதவிப் பணிப்பாளர்கள் நியமனம்!

Saturday, August 13th, 2016

வடமாகாணத்திலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் துறை மாவட்ட அலுவலகங்களுக்குப் புதிய உதவிப் பணிப்பாளர்கள் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி இதுவரை காலமும் முல்லைத் தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய  ஜெயராஜசிங்கம் சுதாகரன் யாழ். மாவட்டக்  கடற்தொழில் நீரியல் வளத் துறை உதவிப் பணிப்பாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்டக் கடற்தொழில் பரிசோதகராகக் கடமையாற்றிய விஸ்வலிங்கம் கலிஸ்ரன் முல்லைத்தீவு மாவட்டக் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். ]

கிளிநொச்சி மாவட்டக் கடற்தொழில் திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளராக நடராஜா ஸ்ரீரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts: