வடபகுதியில் காற்று அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Wednesday, December 21st, 2016

நாட்டின் வடபகுதியில் வலுவான காற்று வீசக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர்கள் வரை அதிகரிக்கலாம் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு, மேற்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் லேசான மழை பெய்யக்கூடும். மேற்கு, சப்ரகமுவ மத்திய தெற்கு மாகாணங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை நிலவுமென திணைகளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3773446_orig-765x510

Related posts: