திருமலையில் சிறுநீரக சத்திரசிகிச்சை பிரிவு!

Thursday, August 31st, 2017

திருகோணமலை வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சை பிரிவொன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இந்த நோயை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொள்வதுடன் இதனால் ஏற்படும் உயிரிழப்புக்களை தடுப்பதற்காக இரத்தம் சம்பந்தமான சிகிச்சை மற்றும் இரசாயன வசதிகளை கொண்ட சிறுநீரக சிகிச்சை பிரிவொன்று திருகோணமலை பெரியாஸ்பத்திரியில் அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதனை அமைப்பதற்கான கேள்வி ஒப்பந்தத்திற்கென அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கேள்வி குழுவின் சிபாரிசுக்கமைய 249.32 மில்லியன் ரூபா நிதியில் இதனை அமைப்பதற்காக M/s  Electro Metal Pressings (Pvt) Ltd.  என்ற நிறுவனத்திற்கு கேள்வி ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது.இது தொடர்பாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts: