வடக்கு, கிழக்கு செயலணி குறித்து அரசாங்கம் கவனம்!

Friday, June 15th, 2018

நாட்டில் தற்போது குற்றச் செயல்கள் குறைவடைந்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக ஜனாதிபதி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள செயலணி குறித்து அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அந்த பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் அந்த பிரதேச மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த போதுமான அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பகுதிகளில் அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை வழிநடத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் மீளாய்வுக்கு உட்படுத்தல் என்பனவற்றுக்காக ஜனாதிபதியின் தலைமையின் கீழ் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த செயலணியில் பிரதமர், மாகாண ஆளுநர்கள், மாகாண செயலாளர்கள், இராணுவம் மற்றும் காவற்துறையினர் ஆகியோர் உள்ளடங்கலாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

Related posts: