வடக்கு – கிழக்கில் கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட கிராமிய அபிவிருத்தித்திட்டம் !

Saturday, March 18th, 2017

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட கிராம அபிவிருத்தித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுத்த மோதல்களினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் இக் கருத்திட்டத்தினூடாக தொழில்முயலுநர் நிலையை அடிப்படையாகக் கொண்ட கிராமியப் பொருளாதாரத் திட்டத்தின் மூலம், இப் பிரதேசங்களில் இன்னமும் பெற்றுக் கொள்ளப்படாமலிருக்கும் சமூக – பொருளாதார அபிவிருத்திக்கு வழிகோலுவதே இதன் நோக்கமாகும்.

முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தவிசாளராகக் கொண்டு செயற்படுகின்ற தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் வடக்கு  கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் உள்ள 08 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலாளர்களினது ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளின் பின்பு கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட இந்த கிராமிய அபிவிருத்திக் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சரான சனாதிபதியினால் இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட அமைச்சரவை அமைச்சரவையினால் கடந்த கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த  அபிவிருத்திக் கருத்திட்டம் மார்ச் மாத இறுதியில் முன்னெடுக்கப்படவுள்ளது

விஷேடமாக குடும்பங்களின் பிரதான குடியிருப்பாளராக உள்ள பெண்கள், விதவைகள் மற்றும் வேலையில்லாமல் ஒடுக்கப்பட்டுள்ள இளைய சமூகத்தினர் ஆகியோருக்கு தொழில்முயலுநர் நிலையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான வழிவகை அமைத்துக் கொடுக்கப்படும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கலில் உள்ள 113 கிராமங்கள் பூராகவும் முன்னெடுக்கப்படும் ரூபா மில்லியன் 446பெறுமதியான (இக் கருத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முயலுநர்கள் 1785 பேருக்கு தங்களது வருமான நிலையை மேம்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பாக கடன் மற்றும் கொடை ஆகிய இரு வழிகளில் இநத் நிதி வழங்கப்படுகின்றது.

அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளினூடாக வழங்கப்படும் இக் கடன் திட்டத்தின் மூலம் ஒருவருக்கு ரூபா 250,000 உச்ச எல்லை வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம். சகல வாணிபத் திட்டங்களுக்காக வழங்கப்படும் மொத்தக் கடன் தொகையின் 25 சத வீத  தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் கொடையாக வழங்கப்படுகிறது. கடனுக்கான மொத்த வட்டித் தொகையையும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் செலுத்தப்படும்

Related posts:


அதிக வெப்பம் : யாழ்ப்பாணத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீருக்கு நிதி ஒதுக்கீடு!
உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது - தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்...
பழைய முறைமையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தெரிவுக்குழு இணக்கம் - தேர்தல் மறுசீரமைப்பு தொ...