யாழ் மாவட்டத்தில் 325 ஹெக்டேயர் நிலப்பரப்பில் திராட்சைப் பழச் செய்கை!
Friday, October 14th, 2016
யாழ் மாவட்டத்தில் 325 ஹெக்டேயர் நிலப்பரப்பில் திராட்சைப் பழச் செய்கை இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. இம்முறை பல விவசாயிகள் இப் பழச் செய்கையில் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஒரு கிலோ திராட்சைப்பழம் 270 ரூபா முதல் 300 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஒரு நாளைக்கு 40 கிலோ திராட்சைப் பழம் வரை அறுவடை செய்யக் கூடியதாகத் தெரிவித்த வலிகாமத்தைச் சேர்ந்த திராட்சைப் பழச் செய்கையாளரொருவர் இதன் மூலம் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா வரை வருமானமாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளதாகவும் கூறினார்.
தற்போது கடும் வெயில் காலம் நிலவுவதால் யாழ். மாவட்டத்தில் திராட்சைப் பழத்திற்கு மிகுந்த கிராக்கி ஏற்பட்டுள்ளது.

Related posts:
அறுவடை இடம்பெறும் விவசாய நிலங்களுக்குச் சென்று நெல் கொள்வனவு செய்யும் தேசிய வேலைத்திட்டம் நாளைமுதல் ...
நாட்டில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்போவதில்லை - நிதி அமைச்சர் பசில் உறுதிபடத் ...
பாகிஸ்தான் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பை அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் – இலங்கையின் அர...
|
|
|


