பாகிஸ்தான் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பை அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் – இலங்கையின் அரச தலைவர்கள் வலியுறுத்து!

Saturday, December 4th, 2021

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் பொது மக்களும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை இலங்கை பாராட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை பாகிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே

பாகிஸ்தான் யு சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, பாகிஸ்தானின் சியால்கோட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தாம் மிகுந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் இம்ரான் கானும், அந்நாட்டு அரசாங்கமும் நீதி வழங்கப்படுவதையும் எஞ்சியுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என நமப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டைக் கடைப்பிடிப்பார் என நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தீவிரவாத கும்பல் நடத்திய காட்டுமிராண்டித் தனமான மற்றும் கொடூரமான தாக்குதலைக் கண்டு இலங்கை அதிர்ச்சியடைகிறது என்றும் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: