யாழ்.மாநகர பகுதி குளங்களை புனரமைக்கும் அய்வுத் திட்டம்!
Saturday, December 3rd, 2016
உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்.மாநகரப் பகுதியில் உள்ள குளங்களை புனரமைக்கும் திட்டத்தின் முன்னோடியாக இதுவரைக்கும் 25 குளங்கள் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாநாகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
மாநகர எல்லைக்குள் காணப்படும் 44 குளங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் அவற்றின பனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் மாநாகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் உதவியுடன் இந்த குளங்களின் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குளங்களின் நீரை எதிர்காலத்தில் ஆய்வுக்கு உட்டுபடுத்தும் நோக்கில் குளத்திற்கு அருகில் கண்காணிப்பு குழாய் கிணறுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த கண்காணிப்பு குழாய் கிணறு ஊடாக குளத்தின நீர் மாதிரி பெறப்பட்டு ஆய்வுசெய்யப்படவுள்ளது.

Related posts:
சுற்றிவளைப்பில் சிக்கிய 484 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!
நாட்டில் 1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு!
அடையாள அட்டை இலக்கத்தை மீண்டும் வரி இலக்கமாக பயன்படுத்த முன்மொழிவு - நடைமுறைப்படுத்துவதில் பல நெருக...
|
|
|


