யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கையெழுத்து போராட்டம் !

Monday, October 23rd, 2017

தமிழ் அரசியல் கைதிகள் எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இந்த போராட்டம் யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகி திருநெல்வேலி யாழ்ப்பாணம் நல்லூர் சுன்னாகம் என முக்கிய இடங்களில் நடைபெற்றது.இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறவுள்ளதாக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.இதனிடையே இந்த கையெழுத்து திரட்டும் போராட்டம் சமகாலத்தில் கிழக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Related posts: