குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்சாரம்!
Saturday, December 31st, 2016
குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் 19 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
குருநாகல் நாரம்மலைஇ குளியாபிட்டிஇ வாரியபொல ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்கள் இதன் மூலம் நன்மை அடைந்துள்ளனர்.
562 குடும்பங்களுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 23 ஆயிரத்து 400 பேர் மின்சாரம் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தனர். இதில் மூவாயிரத்து 800 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

Related posts:
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை முயற்சி!
உரங்களை தடை செய்யும் முட்டாள்தனமான முடிவால் தேயிலை கைத்தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது - அமைச்...
5G தொழில்நுட்ப முறை குறித்து அவதானமாகவே இலங்கை செயல்படும் - இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு!
|
|
|


