யாழ்.பல்கலைக்கழக நாடக விழாவிற்கு ஜனாதிபதி நிதி அன்பளிப்பு!
Friday, July 6th, 2018யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையும், ‘வெறுவெளி அரங்கக் குழுவும்’ இணைந்து ஏற்பாடு செய்த நாடக விழாவுக்கான செலவினை பெற்றுத்தருமாறு நுண்கலைத்துறை மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரியதன் பேரில் அந்நிதியினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்பளிப்பு செய்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நுண்கலைத் துறையின் வெறுவெளி அரங்கக் குழுவின் தலைவரும் நுண்கலைத் துறையின் மாணவனுமாகிய திரு ச.சுஜீவனிடம் இதற்கான காசோலையினை ஜனாதிபதி வழங்கினார்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையின் விரிவுரையாளர் கலாநிதி க.ரதிதரன் மற்றும் ஜனாதிபதியின் கலைச் செயற்பாடுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் தர்மசிறி பண்டாரநாயக்க ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.
Related posts:
தரமற்ற பெரிய வெங்காயம் அழிப்பு!
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள பைஸர் நிறுவனத்துடன் உடன்படிக்கை!
ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் 7800 ஆசிரியர்களுக்கு, புதிய நியமனங்கள் - கல்வி அமைச்சர் ச...
|
|