யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாக மூன்றாவது தடவையாக வேல்நம்பி தெரிவு !
Monday, August 14th, 2017யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தின் பீடாதிபதிக்கான தேர்தலில் மீண்டும் பேராசிரியர் தி.வேல்நம்பி வெற்றி பெற்று மேற்படி பீட பீடாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.
.
கடந்த -2011 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாக
புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1996 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். பின்னர் முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தின் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர், கணக்கியல், முகாமைத்துவம், தமிழியல் சார்ந்த துறைகளில் பல்பரிமாண ஆளுமை மிக்கவராக விளங்குகின்றார். இவர் சிறந்த பேராசிரியர் மற்றும் சிறந்த கல்விசார் ஆய்வாளர் முதலிய விருதுகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் பெற்றுள்ளார்.
Related posts:
|
|