யாழ். நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் பழக் கடைகள் போன்றவற்றின் மீது மாநகர சுகாதாரப் பிரிவினர் திடீர்ச் சோதனை நடவடிக்கை

யாழ். நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் பழக் கடைகள் போன்றவற்றின் மீது மாநகர சுகாதாரப் பிரிவினர் திடீர்ச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர் . கடந்த வாரத்தில் மேற்கொண்ட சோதனை நாடவடிக்கையின் போது போதிய சுகாதார வசதிகளின்றிச் செயற்பட்ட மூன்று உணவகங்கள் சிக்கின . அத்துடன் பாவனைக்கு உதவாத அழுகிய பழங்களை விற்பனை செய்த ஆறு பழக் கடைகளும் இந்தச் சோதனை நடவடிக்கையின் போது சிக்கிக் கொண்டன.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது சிக்கிக் கொண்ட ஒன்பது வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் அடாவடி: மூவர் கைது!
கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கின!
நாடும் பொருளாதாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளமையையிட்டு ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சியடைய வேண்...
|
|