யாழ்.சுதுமலையில் வீட்டுக் கிணறொன்றிலிருந்து 84 வயது முதியவரின் சடலம் மீட்பு!  

Tuesday, January 24th, 2017

யாழ்.சுதுமலை வடக்கு மானிப்பாய்ப் பகுதியிலுள்ள வீட்டுக் கிணறொன்றிலிருந்து 84 வயது முதியவரொருவரின் சடலம் நேற்றுத் திங்கட்கிழமை(23) மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை வேளையில் உறக்கத்திலிருந்த நிலையில் காணாமல் போயிருந்த முதியவரை அவரது  மனைவி தேடிப் பார்த்த போது கிணற்றில் சடலமாகவிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்துச் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அயலவர்களின் உதவியுடன் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக மானிப்பாய்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
death-body-3

Related posts: