யாழ்.கோப்பாய் மதவடிப்பகுதியில் விபத்து: இரண்டு வயதுக் குழந்தை உட்பட மூவர் காயம் !
Thursday, January 12th, 2017யாழ்.கோப்பாய் மதவடிப்பகுதியில் நேற்றுப் புதன்கிழமை(11) முற்பகல்-11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் கோப்பாய் குமரபுரத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட மூவர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் குமரபுரத்தைச் சேர்ந்த மூவரும் கைதடி நோக்கி சிறியரக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை கோப்பாய் மதவடி வீதியை அண்மித்த வேளை பின்புறமாக வந்த படிரக வாகனம் இவர்களை மோதித் தள்ளி விட்டுச் சென்றுள்ளது . சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கி ளில் பயணித்த 25 வயதுப் பெண், மற்றும் அவரது இரண்டு வயதுக் குழந்தை மற்றும் சகோதரன் ஆகியோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related posts:
25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இறுக்கமான பயணக்கப்பட்டுப்பாடு – விவசாயம் கடற்றொழில் நடவடிக்கைகளை முன்ன...
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை இரத்து செய்து வெளியானது வர்த்தமானி !
பாதுகாப்பற்ற வகையில் காணப்படுகின்ற காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு...
|
|