யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!

Friday, March 24th, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை(25) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, அச்சுவேலி ஆஸ்பத்திரி, அச்சுவேலி நகர், பத்தமேனி, கதிரிப்பாய், இடைக்காடு, தம்பாலை, செல்வநாயகபுரம் ஆகியவிடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது

Related posts: