யாழ். குடாநாட்டின் சில இடங்களில் இன்று மின்தடை !
Saturday, September 3rd, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில இடங்களில் ஈன்று சனிக்கிழமை(03) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி இன்று சனிக்கிழமை(02) மயிலங்காடு, குப்பிளான், மறவன் புலவு- கேர வீதி, கோகிலாக் கண்டி, நாவற்காடு, குடமியன், மிருசுவில் வடக்கு, பளையின் ஒரு பகுதி, அரசர் கேணி, கச்சார் வெளி, இத்தாவில், முகமாலை, விழுப்பளை, கரம்பகம், கல்வி சார் தேர்ச்சி பெற்ற பெண்கள் பண்ணை, மருதங்குளம், உசன், விட்டுத்தற் பளை, கேற்பெலி, கிளாலி, தவசிக்குளம், எழுதுமட்டுவாள் 531 ஆம் பிரிவு இராணுவ முகாம், மிருசுவில் 52 ஆம் பிரிவு இராணுவ முகாம், ரோக்கியோ சீமெந்து மிக்ஸர் பிளான்ட், சங்கர் கொங்கிறீட் மிக்ஸர் பிளான்ட் ஆகியவிடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|