யாழ்.-கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு மனித  உரிமைகள் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு !

Saturday, May 21st, 2016

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான மனித  உரிமைகள் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு யாழ். கிறீன் கிறாஸ் ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை(20-05-2016) காலை -9 மணிக்கு  ஆரம்பமாகியது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்தச்  செயலமர்வு யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தலைமையில் ஆரம்பமாகியது.

இதன்போது இலங்கைமனிதஉரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் எஸ்.அம்பிகாஇ இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்வி அதிகாரி எஸ்.கபிலன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர் .

யாழ்ப்பாணம்  மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த  ஊடகவியலாளர் பலரும் கலந்து கொண்ட இந்தச் செயலமர்வு நாளை சனிக்கிழமையும் நடைபெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்கின் அபிவிருத்தியை எமது அரசாங்கம் மிக ஆர்வமாக முன்னெடுக்கின்றது - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல...
சிறுவர் பெண்கள் வன்முறைகளை கல்வி ஊடாக தடுத்து நிறுத்த வேண்டும் - அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு!
திருப்தியான கையிருப்பை பேணுவதற்கு 6 பில்லியன் தேவை - அரிசி கையிருப்பு தொடரில் நெல் சந்தைப்படுத்தல் ...