யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்துக்கு ஆளணி பற்றாக்குறை!

Thursday, January 19th, 2017

யாழ்.மாவட்ட நீரியல்வள திணைக்களத்தில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது என்றும் தற்போது 5 கடற்றொழில் பரிசோதகர்கள் மட்டுமே கடமையாற்றி வருகின்றனர் என்றும் மேலும் 17 கடற்றொழில் பரிசோதகர்கள் தேவைப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்து.

திணைக்கள நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அண்மைக்காலமாக கடற்றொழில் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

இந்தத்துறையை விருத்தி செய்வதற்கு அளிகளவான ஆளணியினர் தேவைப்படுகின்றனர். எல்லை தாண்டும் மீனவர்களை கையாள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் திணைக்களத்திற்கு தேவைப்படுகின்ற ஆளணிகளை முழுமைப்படுத்துவது அவசியமாகவுள்ளது. உரிய தரப்பினர் இந்த ஆளணி பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

Fishermen-Arrested-600x381

Related posts: